போக்குவரத்துக்கு இடையூறு செய்த மாடுகள், பிடித்து அடைத்து வைத்த நகராட்சி அதிகாரிகள் பூட்டை உடைத்து மீட்ட உரிமையாளர்கள்

x

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் போக்குவரத்துக்கு இடையூறு என, நகராட்சி அதிகாரிகள் பூட்டி வைத்த மாடுகளை உரிமையாளர்கள் பூட்டை உடைத்து மீட்டு சென்றனர்.

பேருந்து நிலையம் பகுதியில் சுற்றித் திரிந்த ஏழு மாடுகள் மற்றும் கன்றுகளை, நகராட்சி ஊழியர்கள் வளாகத்தில் அடைத்து சென்றனர். இதனை அறிந்த மாட்டின் உரிமையாளர்கள் பெட்ரோல் கேனுடன் வந்து நகராட்சி அலுவலக ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். பின்னர், வளாகத்தின் பூட்டை உடைத்து தங்களது மாடுகளை மீட்டு சென்றனர். நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக மாட்டின் உரிமையாளர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்