பொது சிவில் சட்டத்திற்கு மாயாவதி ஆதரவு

x

பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, அதனை அரசியலாக்கி வலுக்கட்டாயமாக அமல்படுத்தக்கூடாது என கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படுவது நாட்டை பலப்படுத்தும், இந்தியர்களை ஒன்றிணைக்கும், மக்களிடையே சகோதரத்துவ உணர்வையும் வளர்க்கும் என கூறியுள்ளார். அதேவேளையில், பாஜக அதனை அமல்படுத்த முயற்சிக்கும் முறையை ஆதரிக்கவில்லை கூறியுள்ள அவர், பொது சிவில் சட்டத்தை அரசியல் ஆக்கி வலுக்கட்டாயமாக அமல்படுத்துவது, பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்