மின்சாரம் தாக்கி மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் - கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார்

x

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் புதிய அரசுக் கல்லூரி கட்டட பணியில் ஈடுபட்டிருந்த பள்ளி மாணவர்கள் 2 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், மாணவர்கள் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதை அடுத்து, சைட் இன்ஜினியர் ஜெயசீலன் ராஜா, சைட் சூப்ரவைசர் பால்சாமி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், கைதான 3 பேர், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, அருப்பக்கோட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்