கட்டுப்பாட்டை இழந்து டீக்கடைக்குள் புகுந்த டிப்பர் லாரி - நொறுங்கிய கடை.. சிதறிய பைக் - பரபரப்பு காட்சி

x

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர டீக்கடையில் புகுந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் நோக்கி டிப்பர் லாரி ஒன்று அதிவேகமாக சென்றுக் கொண்டிருந்தது.

அப்போது, திடீரென லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, அவ்வழியாக சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியதோடு,சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்தது.

இதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்