கள்ளக்காதலனை விரட்டி அடித்துவிட்டு பெண்ணை பலாத்காரம் செய்த நண்பர்கள் - தோப்பில் நடந்த பகீர்

x

மரக்காணம் அருகே, கள்ளக்காதலனை விரட்டி அடித்துவிட்டு, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்த 40 வயது பெண், தனது கணவரை பிரிந்து, 3 மகள்களுடன் வாழ்ந்து வருகிறார். அந்த பெண்ணுக்கும், புதுச்சேரி காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று இருவரும் மரக்காணம் அருகே உள்ள தைலமர தோப்பிற்கு சென்றுள்ளனர். அங்கு வந்த மரக்காணம் பகுதியை சேர்ந்த எழில் பரதன் மற்றும் அவரது நண்பர் இருவரும் சேர்ந்து, கள்ளக்காதலனை அடித்து விரட்டியுள்ளனர். தனியாக சிக்கிய அந்த பெண்ணை மிரட்டி, எழில் பரதனும், அவரது நண்பரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அதனை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த அந்தப் பெண், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், எழில் பரதன் மற்றும் அவரது நண்பனை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்