மாண்டஸ் புயல் பாதிப்பு - யாருக்கு எவ்வளவு நிவாரணம்? - அரசு அறிவிப்பு

x

மாண்டஸ் புயல் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அதிகாரிகளிடம் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாண்டஸ் புயல் காரணமாக ஐந்து பேர்

உயி​ரிழந்ததாக கூறியுள்ளார். 98 கால்நடைகள் உயிரிழந்துள்ளது என்றும் 25 குடிசைகள் முழுமையாகவும்,138 குடிசைகள், 18 வீடுகள் பகுதி அளவிலும் சேதம் அடைந்துள்ளதாக கூறியுள்ளார்.

உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு தலா 4 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்