கடலின் ஆழம் வரை போன மாண்டஸ்... இதையும் விட்டு வைக்கவில்லையா..! மிரண்டு போன போலீசார்

x

கடல் ஆராய்ச்சிக்காக ஆழத்தில் நிறுத்தப்பட்டிருந்த மிதவையானது காற்றின் வேகத்தால் அது பொருத்தப்பட்டிருந்த கான்கிரீட்டை பெயர்த்துக்கொண்டு கரை ஒதுங்கி உள்ளது.

தேசிய கடல் சார் ஆய்வு மையத்தின் சார்பில் பயன்படுத்தக்கூடிய கருவியான மிதவை ஒன்று,

மான்டஸ் புயல் எதிரொலியாக சென்னை காமராஜ் சாலையில் மாநில கல்லூரிக்கு கரை ஒதுங்கி உள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த சென்னை திருவல்லிக்கேணி போலீசார் மற்றும் கடலோர காவல் படை வீரர்கள் ஒன்றிணைந்து 6 அடி உயரம் கொண்ட மிதவையை கயிறு கட்டி இழுத்து கரைத்துக் கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட மிதவை தேசிய கடல் சார் ஆராய்ச்சி மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆராய்ச்சியாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்