புரட்டி போட்ட மாண்டஸ் புயல்... பலத்த காற்றால் சேதமான குடிசை வீடுகள்

x

மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான குடிசை வீடுகள் சேதமடைந்ததால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். மாண்டஸ் புயல் அதிகாலை கரையை கடந்த போது பலத்த சூறாவளி காற்று வீசியது. இதன் காரணமாக, கூனங்குப்பம், குளத்துமேடு, சோமஞ்சேரி ஆகிய பகுதிகளில் 10 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் சேதமடைந்தன. குளத்துமேடு பகுதியில் சேதமடைந்த வீடுகளை பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, வட்டாட்சியர் செல்வகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். மேலும், கடல் அலையில் மீன்பிடி வலைகள் அடித்து செல்லப்பட்டதால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்