நூற்றுக்கணக்கான உயிர்கள்.. காவு வாங்கிய மாண்டஸ் புயல் - கொத்து கொத்தாக செத்து மடிந்த கால்நடைகள்

x

மாண்டஸ் புயலால் இலங்கையில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன. இலங்கை, முல்லைத்தீவில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தில் கால்நடைகள் உயிரிழந்தன. பலத்த காற்று மற்றும் குளிர் காரணமாக வடக்கு மாகாணத்தில் 300-க்கும் மேற்பட்ட மாடுகளும், 180-க்கும் மேற்பட்ட ஆடுகளும் உயிரிழந்தன. இதே போன்று யாழ்ப்பாணத்திலும் கால்நடைகள் உயிரிழந்தன. மேலும், கால்நடைகள் மற்றும் செல்லப் பிராணிகளை குளிர் அதிகம் பாதிக்காதவாறு கொட்டில்களில் பாதுகாப்பாக வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்