புயலில் சிக்கி தவித்த மாற்றுத்திறனாளி - காவல்துறையினர் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்

x

சென்னை சேப்பாக்கம் அருகே புயலில் சிக்கி தவித்த மாற்றுத்திறனாளி முதியவரை காவல்துறையினர் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். மாண்டஸ் புயல் காரணமாக நேற்று இரவு பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியிருந்த நிலையில், சேப்பாக்கம் மைதானம் அருகே புயலின் போது, மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் தவித்துக் கொண்டிருந்தார். அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருவல்லிக்கேணி உதவி ஆணையர் பாஸ்கர் தலைமையிலான காவல்துறையினர் முதியவரை மீட்டு தனியார் காப்பகத்தில் சேர்த்தனர்.


Next Story

மேலும் செய்திகள்