வீட்டு சிலிண்டரில் விபரீதம் செய்து காரை தீக்கிரையாக்கிய நபர் - ஈரோட்டில் பரபரப்பு

x

ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஒலகடத்தில் வீட்டு சிலிண்டர் பயன்படுத்தி காருக்கு கேஸ் நிரப்ப முயன்ற போது ஏற்பட்ட தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து சாம்பலானது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே மூன்றுசாலை பகுதியை சேர்ந்த ரங்கசாமி, ஒலகடம் பகுதி வழியாக வீடு திரும்பிய போது காரில் கேஸ் தீர்ந்தது. இதையடுத்து அதே பகுதியில் வீட்டு சிலிண்டர் பயன்படுத்தி தனது காருக்கு கேஸ் நிரப்பி உள்ளார். அப்போது விபத்து ஏற்பட்ட நிலையில், கார் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. விபத்து குறித்து தகவலறிந்த அந்தியூர் தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இதையடுத்து வெள்ளி திருப்பூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்