டிராக்டர் வைத்து தகர கொட்டகையை சுக்குநூறாகிய நபர் - அதிர்ச்சி காட்சிகள்

x

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, நில பிரச்னை தொடர்பாக, தகர கொட்டகையை டிராக்டரால் இடித்து தள்ளியது பரபரப்பை ஏற்படுத்தியது.வேடசந்தூர் - ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள 14 செண்ட் நிலம் தொடர்பாக, குன்னம்பட்டியை சேர்ந்த மயில்முருகன், காலாஞ்சிபட்டியை சேர்ந்த கனகராஜ் ஆகியோருக்கு இடையே பிரச்னை இருந்து வருகிறது. அந்த இடத்தில், மயில்முருகன் அமைத்திருந்த தகர கொட்டகையை, கனகராஜ் தரப்பினர் டிராக்டர் மூலம் இடித்து தள்ளியதாக தெரிகிறது. அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்ற போது, டிராக்டர் மீது ஏறிய கனகராஜ், கையில் குச்சியை வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற வேடந்தூர் போலீசார், கனகராஜ் தரப்பினரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்