கொட்டித் தீர்த்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு - வெள்ளக்காடாக காட்சியளிக்கும் வீதிகள்... 4 பேர் உயிரிழப்பு

x

மலேசியாவின் ஜொஹோர் மாநிலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது... ஜொஹோர் சிங்கப்பூர் எல்லையில் அமைந்துள்ளது... மழையால் இந்த மாநிலமே வெள்ளக்காடாகக் காட்சியளிக்கும் நிலையில், சுமார் 40 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது... மேலும் கடந்த வாரத்தில் மட்டும் 4 பேர் கனமழையால் உயிரிழந்துள்ளனர்... அதிகாரிகள் கூடுதல் முகாம்களை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தி வருகின்றனர். இம்மாநிலத்தில் மேலும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்