"ஏதாச்சும் ஒரு வழி பண்ணுங்க சார்" - 2கிமீ-ல் காவிரி..தவிக்கும் மக்கள்

x

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குமாரமங்கலம் வழியாக செல்லும் சிவகங்கை கூட்டு குடிநீர் திட்ட பணிகளை பொதுமக்கள் தடுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி ஆற்றிலிருந்து 2 கிலோமீட்டர் அருகில் உள்ள குமாரமங்கலம் பகுதிக்கு ஊராட்சி நிர்வாகம் இதுவரை குடிநீர் வசதி செய்து தரவில்லை என புகார் எழுந்தது. இந்நிலையில், குமாரமங்கலம் பகுதி வழியாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்ற போது, பொதுமக்கள், ஜேசிபி இயந்திரம் முன் பணிகளை செய்ய விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குளித்தலை போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போது பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்