அரிவாளோடு வலம் வந்த அடைமொழி ரவுடிகள்... - முன் விரோதில் அரங்கேறிய கொடூர கொலை...

x

23 வயதே ஆன பிரபல ரவுடி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வெட்டி கொல்லப்பட்டிருக்கிறார். யார் கெத்து என்ற போட்டி உயிர் பறித்த கதை இது!

குடியிருப்பு பகுதியையே கொலை நடுங்க செய்த அந்த கொடூர கொலை… இந்த குறுகலான சாலையில் தான் அரங்கேறி இருக்கிறது.


நடந்து முடிந்த சம்பவத்தின் பதட்டம் இன்னும் அந்த பகுதி மக்களை விட்டு அகலவில்லை.


போலீசார், சடலத்தை கைபற்றி அங்கிருந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் வேலையில் மும்புரமாக ஈடுபட்டிருந்தனர்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், அவர்கள் கண்ட திகிலோடு நடந்ததை விரித்து கொண்டிருந்தனர்.

அந்த பகுதி முழுவதும் ரத்தவாடை வீசியது..


கொல்லப்பட்டவர் ராஜேஷ் என்கிற திருட்டு ராஜேஷ். மதுரவாயல் அடுத்தள்ள நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர். 23 வயதான ராஜேஷ் மீது

கஞ்சா விற்பனை, வழிப்பறி, கொலை, மற்றும் கொலை மிரட்டல் என பல்வேறு வழக்குகள் உள்ளன. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் திருட்டு ராஜேஷ் அந்த பகுதியின் பிரபலமான ரவுடி...


சம்பவம் நடந்த அன்று இரவு 8 மணியளவில் கந்தசாமி நகர் வழியே மோட்டார் சைக்கிளில் வந்த ராஜேஷை வழிமறித்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், பரபரப்பான அந்த சாலையில் வைத்தே சரமாரியாக வெட்டி சாய்த்திருக்கிறது…


மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போயிருக்கிறார்…


இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த மதுரவாயல் போலீசார், விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள்.

ராஜேஷ் பிரபலமான ரவுடி என்பதால் எதிரிகளால் அவர் வெட்டி கொல்லப்பட்டிருப்பார் என்று தான் போலீசார் முதலில் நினைத்தனர். ஆனால் விசாரணையின் முடிவில், ராஜேஷை கொடூரமாக கொலை செய்தது அவரது உயிர் நண்பர்கள் என்று தெரியவந்திருக்கிறது.

கைது செய்யப்பட்டவர் பன்னி சுரேஷ். பூந்தமல்லி அடுத்த கூடப்பாக்கத்தை சேர்ந்தவர். ராஜேஷூம், சுரேஷூம் அடைமொழி வைத்து அட்ராசிட்டி செய்து வந்த நண்பர்கள்.

இருவரும் சேர்ந்து ஏராளமான குற்ற சம்பவங்களை செய்திருக்கிறார்கள்.


ஒன்னு மன்னாக இருந்து வந்த நண்பர்களுக்கு இடையே, ஏரியாவில் யார் பெரிய ஆள் என்ற போட்டி தொடங்கியிருக்கிறது.

அடிக்கடி வாய் தகராறு கைகலப்பு என கொஞ்சம் கொஞ்சமாக பகை முற்றி, இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி கதையை முடிக்க நாள் குறித்திருக்கிறார்கள்…

ஒரு சில மாதங்களுக்கு முன்பு ராஜேஷ் நண்பர்களோடு சேர்ந்து சுரேஷை கொலை செய்ய முயன்றிருக்கிறார். அதிஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறார் சுரேஷ்.

தனக்கு உயிர் பயத்தை காட்டிய நண்பனின் உயிரை எடுக்க உடனே ஸ்கெட்ச் போட்டிருக்கிறார் சுரேஷ்

அந்த திட்டப்படி தான் நண்பர்களோடு சேர்ந்து ராஜேஷை வெட்டி கொலை செய்திருக்கிறார் சுரேஷ்.

சிறுவயதிலேயே பாதை மாறி போனதால் வாழ வேண்டிய வயதில், வாழ்கையையே இழந்து நிற்கின்றனர் இந்த இளைஞர்கள்.


Next Story

மேலும் செய்திகள்