சாவகாசமாக புகையிலையை கசக்கி போட்டு கடைக்குள் திருட சென்ற நபர்

x
  • சென்னையில் டீக்கடையினுள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட நபர், திருடுவதற்கு முன்பு புகையிலை போட்டு திருட செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
  • மதுரவாயல் அடுத்த ஆலம்பாக்கம் பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் காளிதாஸ்.
  • இவரது கடைக்குள் இரவில் புகுந்த நபர் ஒருவர், கல்லாவில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றதாக போலீசில் புகாரளித்துள்ளார்.
  • இதையடுத்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
  • இதில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடையினுள் திருடுவதற்கு முன்பாக புகையிலை போட்டு திருட சென்றது சிசிடிவியில் பதிவான நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்