போலி மதுபான ஆலையில் போலீசார் சோதனை... ரூ.40 லட்சம் மதிப்பிலான எரிசாராயம் பறிமுதல் - திமுக நிர்வாகி உட்பட 2 பேர் கைது

x

மதுராந்தகம் அருகே, போலி மதுபான ஆலை நடத்தி வந்த திமுக கிளைச் செயலாளர் உட்பட 2 பேரை கைது செய்தனர்.

வடமண்ணிப்பக்கம் கிராமத்தை சேர்ந்த வடிவேலு என்பவருக்கு சொந்தமாக கெங்கறையில் அரிசி ஆலை உள்ளது. இந்த ஆலையில், போலி மதுபானங்கள் தயாரிப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட போலி எரி சாராயம், 212 கேன்கள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவத்தில் வட மண்ணிப்பாக்கம் திமுக கிளைச் செயலாளர் வடிவேலு மற்றும் முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்