"தப்பு பண்ணா உறிச்சி எடுத்திருங்க.." பிரம்புடன் மகனை ஸ்கூலில் சேர்த்த பெற்றோர் - இப்படியும் ஒரு தாய், தந்தையா?

x

மதுரையில் மகனை பள்ளியில் சேர்த்தபோது, தவறு செய்தால் அடித்து சொல்லிக் கொடுங்கள் என்று கூறி தலைமை ஆசிரியரிடம் பெற்றோர் பிரம்புக் கம்பை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையைச் சேர்ந்த சங்கரபாண்டியன், தமிழரசி தம்பதி தங்கள் 4 வயது மகன் சக்தியை அருகில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சேர்த்தனர்.

அப்போது, 4 அடி நீளமுள்ள பிரம்புக் கம்பையும், உறுதிமொழி கடிதத்தையும் தலைமை ஆசிரியரிடம் அவர்கள் அளித்தனர்.

அதில், தனது மகன் தவறு செய்தால், இந்த பிரம்பால் அடிக்க வேண்டும் என்றும், அப்போதுதான் அவன் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்றும் உறுதிமொழி பத்திரத்தில் எழுதிக் கொடுத்தனர்.

மாணவர்களை ஆசிரியர்கள் அடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில், ஆசிரியர்களின் கண்டிப்பில்தான் சிறந்த மாணவனை உருவாக்க முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, பிரம்பை கொடுத்ததாக பெற்றோர் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்