அரசு பள்ளி வாசலை மூடிய 4 அடி உயர மழைநீர் வடிகால்...அதன் மீது ஏறி செல்லும் மாணவர்கள்

x

அரசு பள்ளியின் வாசல் முன்பு சுமார் 4 அடி உயரத்திற்கு மழைநீர் வடிகால் கட்டப்பட்டதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மதுரை மாவட்டம், மேலூர் அருகே நாவினிபட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் வாசல் முன்பு சாலை விரிவாக்கத்திற்காக சுமார் 4 அடி உயரத்திற்கு மழைநீர் வடிகால் கட்டப்பட்டுள்ளது. இதனால், பள்ளியின் பக்கவாட்டுச் சுவர் இடிக்கப்பட்டு மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு உடனடியாக நிரந்தர தீர்வு காண வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்