வீடு புகுந்து கொலைவெறி தாக்குதல்..! அலறிய திமுக நிர்வாகியின் குடும்பம்... திமுக வட்டச் செயலாளரின் மகன் அரங்கேற்றிய பயங்கரம்

x
  • மதுரை மாநகராட்சி முத்துப்பட்டி RMS காலனி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர், திமுக பொறியாளர் அணியின் அமைப்பாளராக பதவியில் உள்ளார்.
  • இவருக்கும் 73வது வார்டு திமுக வட்டச் செயலாளர் விஜயசேகர் என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே, உட்கட்சி பூசல் இருந்து வந்தது.
  • மதுரை மாநகராட்சி மாமன்ற தேர்தலின்போது, 73 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட விஜயசேகர் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அந்த வார்டு பகுதியானது காங்கிரஸுக்கு வழங்கப்பட்டு தற்போது காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து வருகிறார்.
  • இந்த விவகாரத்தில், மணிகண்டன் மீது, திமுக வட்டச் செயலாளர் விஜயசேகர் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
  • இதன் உச்சகட்டமாக, மணிகண்டன் வீட்டிற்கு சென்ற வட்டச்செயலாளர் விஜயசேகரின் மகன் விஜயபாபு மற்றும் அவரது நண்பர்கள், மணிகண்டன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
  • இதுதொடர்பான புகாரின் பேரில், விஜயபாபுவை கைது செய்த போலீசார், விஜயசேகர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்