12-3 மணி வரை மக்கள் வெளியே செல்ல வேண்டாம் - மதுரை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த கலெக்டர்

x

மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என்றும், பகல் நேர பயணங்களின் போது, குடிநீர் எடுத்துச்செல்லுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மயக்கம் அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும், அவசர கால தேவைகளுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 1077ஐ தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்