அரசுப் பேருந்தும் லாரியும் மோதியதில் பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர விபத்து - பயணிகளுக்கு நேர்ந்த கதி

x

விழுப்புரம் மாவட்டம் ஆலம்பூண்டி அருகே தாங்கல்கரை என்ற இடத்தில் அரசு பேருந்தும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் காயம் அடைந்தனர்.திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்தும் செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற லாரியும் மோதிக் கொண்டதில், லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. தர்மபுரி மாவட்டம் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முருகன் படுகாயம் அடைந்தார். அதேபோல் பேருந்தில் பயணம் செய்த 5 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்