புரோட்டோ குருமாவில் கிடந்த "பல்லி"... ஓனரை தட்டிகேட்கும் போதே தம்பதிக்கு வாந்தி, மயக்கம்

ஈரோட்டில் பல்லி விழுந்த குருமாவை சாப்பிட்ட 4 பேர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x

ஈரோடு நகரின் மையப்பகுதியான காளைமாடு சிலை அருகே பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு புரோட்டாவிற்கு வழங்கப்பட்ட குருமாவில் பல்லி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர், உணவக உரிமையாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது தம்பதி உட்பட இருவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. உடனடியாக அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுக்குறித்தான புகாரின் பேரில் உணவு பாதுப்பு துறை அலுவலர், உணவகத்தை மூட உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்