"போதை தரும் மருந்து.. விதிகளை மீறும் மருந்தகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்

x

போதை தரும் மருந்து.. "விதிகளை மீறும் மருந்தகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்" - தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை

மருத்துவர் பரிந்துரையின்றி போதை தரக்கூடிய மருந்துகளை தவறான பயன்பாட்டிற்காக விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் சமீப நாள்களாக மருத்துவர்கள் பரிந்துரையின்று போதை தரக்கூடிய மருந்துகள் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு வாரிய இயக்குநர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி உரிய பரிந்துரையின்றி போதை தரக்கூடிய மருந்துகள் விற்பனை செய்யப்பட்டால், மருந்து விற்பனையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்