வால்பாறையில் சிறுத்தை புலி தாக்குதல்..தேயிலை தோட்ட தொழிலாளி படுகாயம்- விரைந்து நடவடிக்கை எடுக்க தொழிலாளர்கள் கோரிக்கை

x

வால்பாறை அருகே சிறுத்தைபுலி தாக்கியதில் தேயிலை தோட்ட தொழிலாளி ஒருவர் படுகாயம் அடைந்தார்.

கோவை மாவட்டம் சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் தேயிலை பறித்துக்கொண்டு இருந்த வடமாநில தொழிலாளி அனில்ஓரானை தேயிலை செடிக்குள் பதுங்கியிருந்த சிறுத்தைப்புலி தாக்கியுள்ளது. அதில் அனில்ஓரானை படுகாயம் அடைந்தார். அப்போது அவரது வலது கால் எலும்பு முறிந்தது. இதனை தொடர்ந்து அனில்ஓரானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே பகுதியில் இரண்டாவது நாளாக சிறுத்தைப்புலி தாக்கிய சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்