கல்லூரி மாணவனை காதலித்து கரம்பிடித்த விரிவுரையாளர் காவல் நிலையத்தில் தஞ்சம்

x

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கல்லூரி மாணவனை திருமணம் செய்த விரிவுரையாளர் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். நன்செய் இடையாறைச் சேர்ந்த மீனா, பரமத்திவேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக, அதே கல்லூரியில் படிக்கும் மாணவன் பிரவீன் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு இரு வீட்டாரின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் வீட்டிலிருந்து வெளியேறி திருவண்ணாமலை சென்று திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கோரி, வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்