சென்னையில் விபத்தில் சிக்கிய வழக்கறிஞரின் கார்

x

சென்னை, மயிலாப்பூர் அருகே இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானது.

திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த டாக்ஸி டிரைவர் குமார் என்பவர், மயிலாப்பூர் லஸ்-கார்னர் அருகே சாலையைக் கடக்க முயன்றார்.

அப்போது, எதிரே வந்த வழக்கறிஞர்கள் காரில் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், காரில் பயணித்த அனைவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்