கடைசி நேர நடவடிக்கை- பொதுத்தேர்வு மாணவர்களுக்கு பாதிப்பு? | Public Exam

x

மூன்று மாதங்களில் பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உபரியாக உள்ள ஆசிரியர்கள் வெவ்வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான கலந்தாய்வு வரும் 28 மற்றும் 29-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. ஆசிரியர் பணியிட மாற்றத்திற்கான கலந்தாய்வு வழக்கமாக கல்வியாண்டின் தொடக்கத்தில் நடைபெறும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கால தாமதமாக நடைபெறுகிறது. பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நேரத்தில், ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்வது மாணவர்களை பாதிக்கும் எனக் கூறப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்