"பத்திரமா பார்த்து வாங்குங்க பத்திரத்தை" - போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு

x

போலியான ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு செய்தவர்களுக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை, திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் தந்தைக்கு சொந்தமான இடத்தை செல்வராஜ், கோவிந்தராஜ் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் போலியான ஆவணங்கள் மூலம் விற்பனை செய்தனர்.

இது குறித்து கணேசன், கடந்த 2010 -ஆம் ஆண்டு காவல் ஆணையாளரிடம் புகாரளித்தார்.

இந்த வழக்கின் விசாரணையின் போது, கணேசனின் சகோதர் பழனியும் வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, பழனிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனையும், மற்ற மூவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்