மடமடவென நிரம்பிய ஏரிகள் | மகிழ்ச்சியில் விவசாயிகள் | LAKE | KANCHIPURAM | PONNERI

x

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உள்ளதால் அம்மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில், 282 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. 57 ஏரிகள் 75 சதவீதத்திற்கு மேலாகவும், 24 ஏரிகள் 50 சதவீதத்திற்கு மேலாகவும், 18 ஏரிகள் 25 சதவீதத்திற்கு மேலாகவும் நிரம்பி உள்ளன. அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்களும் நிரம்பி உள்ளன. இதனால் அம்மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

10வது நாளாக புழல் ஏரியில் இருந்து 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை புழல் ஏரிக்கான நீர் வரத்து 391 கன அடியாக இருந்து வரும் நிலையில், ஏரியிலிருந்து தொடர்ந்து 10 நாளாக 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 3 ஆயிரத்து 300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், தற்போது நீர் இருப்பானது 2 ஆயிரத்து 786 மில்லியன் கன அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்