சினிமா சண்டை காட்சி பாணியில் நடந்த கொடூரம் நண்பனை ஓட ஓட விரட்டி கொலை- 3 பேர் கைது.. குமரியில் நடந்த பயங்கரம்

x
  • கன்னியாகுமரி அருகே, இளைஞரை ஓடஓட விரட்டி, கொலை செய்த கொடூரம் நடந்தேறியுள்ளது...
  • புன்னையடி பகுதியை சேர்ந்தவர் பெலிக்ஸ். டெம்போ ஓட்டுநரான இவர், தனது நண்பர் கண்ணன் என்பவருக்கு 15 ஆயிரம் ரூபாயை கடனாக கொடுத்ததாக தெரிகிறது.
  • இதனிடையே, கடனை திருப்பி கேட்டபோது, பெலிக்ஸுக்கும், கண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
  • இந்நிலையில், கடனை திருப்பி தருவதாக தனது வீட்டிற்கு அழைத்த கண்ணன், தனது நண்பர்களுடன் இணைந்து பெலிக்ஸை அரிவாள் மற்றும் கத்தியால் பயங்கரமாக தாக்கியுள்ளார்.
  • இதில் படுகாயம் அடைந்த பெலிக்ஸ் தப்பியோட முயற்சித்த நிலையில், விடாமல் துரத்திச் சென்ற அக்கும்பல், பெலிக்ஸை படுகொலை செய்துள்ளது.
  • சினிமா சண்டை காட்சி பாணியில் நடந்தேறிய இந்த கொலை சம்பவத்தில், கண்ணன் உட்பட மூன்று பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள நான்கு பேரை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்