"கே..எஸ். அழகிரி பதவி விலக வேன்டும்" - தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தல்

x

சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் ஈ.வி.கேஎஸ் இளங்கோவன் மற்றும் கே.வி தங்கபாலு, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அதில், சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதலுக்கு, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழிகிரி பொறுப்பேற்று பதவி விலக செய்ய வேண்டும் என வலியிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தில், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மல்லிகார்ஜுன கார்கே உறுதி அளித்தாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்