ஸ்ரீ வீரபத்திரசாமி குடியப்ப சுவாமி கோயில் திருவிழா... வெளிமாநில குருமன்ஸ் இன மக்கள் பங்கேற்பு - பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்த பூசாரிகள்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் அருகே, ஸ்ரீ வீரபத்திரசாமி குடியப்ப சுவாமி கோவிலில் திருவிழா நடைபெற்றது. இதில் வெளிமாநிலங்களில் இருந்து 9 கிராமங்களை சேர்ந்த, குருமன்ஸ் இன மக்கள் தங்கள் குடும்பத்துடன் திருவிழாவில் பங்கேற்றனர்.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில், சம்பிரதாய முறைப்படி பூசாரிகள் தேங்காயை உடைத்தனர்.

தொடர்ந்து சாமி சிலைகளை தலைமேல் வைத்து, பூசாரிகள் அருள்வாக்கு கூறி கரகம் ஒன்று கூடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்