காலில் விழுந்தும் டீக்கடையில் வடை சுட்டும் திமுகவினர் பிரச்சாரம் - களைகட்டும் ஈரோடு தேர்தல் களம்

x

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில், வாக்காளர்களின் கால்களில் வணங்கியும், தேநீர் கடையில் வடை சுட்டும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குரலில் பேசியும் கை சின்னத்திற்கு ஆதரவாக திமுக நிர்வாகிகள் வாக்குசேகரித்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுயில், வரும் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர்கள் சார்ந்துள்ள கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக பி.பி. அக்ரஹாரம் பகுதியில், வாக்காளர்களின் கால்களில் விழுந்து வணங்கி தமிழ்நாடு அரசின் திட்டங்களை எடுத்துரைத்தும், அப்பகுதியில் உள்ள தேனீர் கடையில் வடை சுட்டும் திமுக நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.

மற்றொரு திமுக நிர்வாகி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குரலில் பேசி, கை சின்னத்திற்கு வாக்கு கேட்டார்.


Next Story

மேலும் செய்திகள்