கோவை கார் சிலிண்டர் விபத்து..சிக்கிய 4 சிம் கார்டுகள், செல்போன் - போலீசார் அதிரடி

x

கோவை கார் சிலிண்டர் விபத்தில் தொடர்புடைய நபரின், வீட்டில் திருச்சி மாநகர போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். என்ஐஏ அறிவுறுத்தலின்படி திருவெறும்பூரில் உள்ள, அப்துல் முத்தலிப் என்பவர் இல்லத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தடயவியல் நிபுணர்கள், சைபர் கிரைம் போலீசார் என, 25க்கும் மேற்பட்டோர் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். இறுதியில் அங்கிருந்து, ஒரு செல்போன், 4 சிம் கார்டுகளை திருச்சி மாநகர போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்