கோவை கார் வெடித்த சம்பவம்..! நீண்ட நாட்களாக ஆங்காங்கே நின்றிருந்த வாகனங்கள் - போலீசார் அதிரடி

x

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக உக்கடம் பகுதியில் உரிமை கோரப்படாத இரு சக்கர வாகனங்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை உக்கடம் பகுதியில் உரிமை கோரப்படாமல் இருந்த இரு சக்கர வாகனங்களை போக்குவரத்து காவல்துறையினர் ஆய்வு செய்தனர். பதிவெண், வாகன பதிவு ஆவணங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் இரு சக்கர வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனிடையே சந்தேகத்திற்கு இடமாக நிற்கும் வாகனங்கள், நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் இருக்கும் வாகனங்கள் உள்ளிட்டவை குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சதி வேலைகளுக்கு காரை பயன்படுத்தியது போன்று இரண்டு சக்கர வாகனங்களை பயன்படுத்தலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் உக்கடத்தில் உள்ள மெக்கானிக் ஷாப் கடைகளில் நீண்ட நாட்களாக நிறுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை கணக்கெடுக்கும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்