சத்தமின்றி கழட்டிவிடப்பட்ட ரோஹித், KL ராகுல்.. அதிரடியாக நீக்கப்பட்ட ரிஷப் பண்ட்

x

இலங்கையுடனான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்து உள்ளது.

அடுத்த மாதம் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடவுள்ளது.

இதற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்து உள்ள நிலையில், டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் இடம்பெறவில்லை.

அதே சமயம் ஒருநாள் தொடருக்கான அணியில் இவர்கள் மூவரும் இடம் பெற்றுள்ளனர். ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

டி20 மற்றும் ஒருநாள் என 2 தொடர்களிலும் ரிஷப் பண்ட் அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார்.

காயத்தில் இருந்து முழுமையாக குணம் அடையாத பும்ரா மற்றும் ஜடேஜா இரு தொடர்களிலும் சேர்க்கப்படவில்லை.

சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சஹால், மீண்டும் ஒருநாள் போட்டிகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இந்தியா - இலங்கை இடையிலான முதல் டி20 போட்டி வருகிற 3ம் தேதி மும்பையில் நடக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்