திருமணமான இளம்பெண் கடத்தப்பட்ட விவகாரம் - நீதிபதிகள் போட்ட உத்தரவு - பாதுகாப்பு வளையத்தில் பெண்

x

திருமணமான இளம்பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவுப்படி, தென்காசி காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள குருத்திகாவிற்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் இலஞ்சி அருகே உள்ள கொட்டா குளத்தை சேர்ந்த வினித் மற்றும் குருத்திகா ஆகியோர், காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால், குருத்திகாவை அவர்கள் கடத்திச் சென்றனர். இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், வினித் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜரான குருத்திகாவை, 2 நாட்கள் காப்பகத்தில் வைத்து ரகசிய வாக்குமூலம் வாங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில், குருத்திகா அனுமதிக்கப்பட்டுள்ள காப்பகத்திற்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல் உதவி ஆய்வாளர் தலைமையில், ஒரு ஷிப்டுக்கு 8 பெண் காவலர்கள் மற்றும் 2 ஆண் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குருத்திகாவை சந்திக்க, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.


Next Story

மேலும் செய்திகள்