கடத்தப்பட்ட தொழிலதிபர் கொலை.. அப்போ மனைவியிடம் கணவன் என பேசியது யார்? - குழம்பும் போலீசார்

x

கொல்லிமலையில் நிதி நிறுவன உரிமையாளர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் கொமரிபாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன். நிதி நிறுவனம் ஒன்றில் பங்குதாரராக இருந்து வந்த இவர், கொல்லிமலை செம்மேட்டில் உள்ள தனியார் விடுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்துவிசாரணை நடத்திய போலீசாருக்கு, சரவணன் தனது மனைவியை தொலைபேசியில் தொடர்புகொண்டு, தன்னை ஒரு மர்ம கும்பல் கடத்தி பணம் கேட்டு சித்திரவதை செய்வதாக கூறியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், பண்ணக்காரன் பட்டியை சேர்ந்த நாகராஜ், நாமக்கல் காவேட்டிப்பட்டியை சேர்ந்த வினோத் உள்ளிட்ட 6 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்