"நடிகரா மட்டும் இல்லைனா இந்நேரம்கம்பி எண்ணிட்டு இருந்திருப்பீங்க" மோகன் லாலை வறுத்தெடுத்த நீதிபதிகள்

யானை தந்த வழக்கில், "சாதாரண நபராக இருந்திருந்தால் இந்நேரம் நடிகர் மோகன்லால் சிறையில் இருந்திருப்பார்" என கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளது.
x

கடந்த 2012ல் வருமான வரித்துறை சோதனையில் நடிகர் மோகன்லால் வீட்டில் 4 ஜோடி யானை தந்தங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் அடிப்படையில் மோகன்லால் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை திரும்ப பெறுவதாக வழக்கு நடைபெறும் பெரம்பாவூர் நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் அரசின் மனுவானது நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி மோகன்லால் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், யானை தந்த வழக்கில் மோகன்லால் சட்டத்தை மீறவில்லை என்றும், இது இறந்த வளர்ப்பு யானையின் தந்தம் என்றும் கேரள அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட கேரள உயர்நீதிமன்றம்,"ஒரு சாமானியனுக்கு அரசு இப்படி தளர்வு அளிக்குமா?" என கேள்வி எழுப்பியதுடன், "சட்டம் அனைவருக்கும் சமமாக பொருந்தும்" என்றும், "மோகன்லால் சாதாரண மனிதராக இருந்திருந்தால் இந்நேரம் சிறையில் இருந்திருப்பார்" எனவும் பரபரப்பு கருத்தைத் தெரிவித்தது.


Next Story

மேலும் செய்திகள்