சாலை ஓரமாக நின்ற லாரி மீது அசுர வேகத்தில் எதிரில் வந்து மோதிய கார் - பதைபதைக்கும் காட்சி

x

கேரள மாநிலம், கொச்சி பெரும்பாவூர் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் குழந்தை உட்பட 4 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில், கார் ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்திற்கான காரணம் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்