கேரளாவை மிரட்டும் காய்ச்சல்..பதறவைக்கும் பலி எண்ணிக்கை.. பயத்தில் உறைந்து போன மக்கள்

x

கேரளாவில் கடந்த 7 நாள்களில் 36 பேர் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்...

கேரளாவில் நாளுக்கு நாள் காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. நேற்றைய தினம் மட்டும் காய்ச்சலுக்கு 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 11 ஆயிரத்து 418 பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது. இவர்களில் 127 பேர் டெங்கு காய்ச்சலாலும், 11 பேர் எலி காய்ச்சலாலும், 6 பேர் எச்1என்1 வைரசாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 7 நாள்களில் மட்டும் காய்ச்சலுக்கு 36 பேர் உயிரிழந்த நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான கணக்கை மாநில அரசு மறைப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்