பள்ளிக்குள் புகுந்த காட்டு யானைகள்... பொருள்களை சேதப்படுத்தி அட்டகாசம் - அச்சத்தில் பள்ளி மாணவர்கள்

x
  • எர்ணாகுளம் மாவட்டம், இடமலையாரில் உள்ள அரசு ஆரம்ப பள்ளிக்குள் அதிகாலை நுழைந்த காட்டுயானைகள், பள்ளியின் ஜன்னல்கள், ஆசிரியர் அறையில் இருந்த கம்யூட்டர் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தின.
  • மேலும், அங்கிருந்த நோட்டு புத்தகங்கள், கோப்புகள் ஆகியவற்றை சேதப்படுத்தி யானைகள், அறைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டி, பூந்தொட்டி ஆகியவற்றை சாய்த்து சேதப்படுத்தின.
  • இதனை அறிந்த அப்பகுதி மக்கள், பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்டினார்கள். கல்வித்துறை அதிகாரிகளும், வனத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு சென்றனர்.
  • யானைகள் வந்து சென்றதால், மாணவர்களும், பெற்றோரும் அச்சம் அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்