ஆவணங்களை பிரிண்ட் போட்டு எடுத்துச் சென்ற காங். நிர்வாகி - வெளியான சிசிடிவி காட்சிகள்

x
  • கொச்சி பிரம்மபுரம் குப்பை கிடங்கு தீ விபத்து விவகாரத்தில், மாநகராட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகி ஆவணங்களை எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
  • கேரளாவில் பிரம்மபுரம் குப்பைக்கிடங்கு தீ விபத்து வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.
  • இது தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்றத்தில் கொடுக்க தயார் செய்யப்பட்ட ஆவணங்களை, மாநகராட்சி நிர்வாகியை மிரட்டி காங்கிரஸ் ஆலோசகர் அரிஸ்டாட்டில் எடுத்துச் சென்றதாக புகார் எழுந்தது.
  • இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதில், கொச்சி மாநகராட்சி அலுவலக நேரம் முடிந்த பின், கவுன்சிலர் உதவியுடன் காங்கிரஸ் கட்சியின் ஆலோசகரான எம்.ஜே.அரிஸ்டாட்டில் சில ஆவணங்களை பிரிண்ட் செய்து எடுத்துச் செல்வது பதிவாகியுள்ளது.
  • ஆனால், சட்டப்பூர்வமாக எடுக்க‌க்கூடிய ஆவணங்களை எடுத்த‌தாக அரிஸ்டாடில் விளக்கம் அளித்துள்ளார்.
  • அதே நேரத்தில், புகாரைத் தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்