நாட்டை உலுக்கிய கேதார்நாத் விமான விபத்து.. சென்னையை சேர்ந்த மூவர் பரிதாப பலி

x

கேதார்நாத்தில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 7 பேரில், மூவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று உத்தரகாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் காலையில் ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்றது. இதில், 7 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. பூர்வா ராமானுஜ், கிருதி, ஊர்வி, சுஜாதா, பிரேம்குமார், கலா மற்றும் விமானி அனில் சிங் ஆகியோர் உயிரிழந்ததாகவும், இதில், பிரேம்குமார், சுஜாதா மற்றும் கலா ஆகிய மூன்று பேரும் சென்னையை சேர்ந்தவர்கள் எனவும் உத்தரகாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது. பிரேம்குமார், அவரது மனைவி சுஜாதா மற்றும் அவர்களது உறவினர்களான கலா, அவரது கணவர் ரமேஷ் ஆகியோர் ஆன்மீக பயணம் சென்ற நிலையில், விபத்தில் மூவர் உயிரிழந்தனர். இதில், கலாவின் கணவர் ரமேஷ், குதிரை சவாரி செய்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்