பெற்ற தந்தையை 30 துண்டுகளாக வெட்டி வீசிய மகன் - கர்நாடகாவை உறைய செய்துள்ள சம்பவம்

x

மதுபோதைக்கு அடிமையானதை தட்டிக்கேட்ட தந்தையை கொடூரமாக கொன்ற மகன் சடலத்தை 30 துண்டுகளாக்கி போர்வெல்லில் போட்டு வைத்த பயங்கரம் கர்நாடகாவில் அரங்கேறி இருக்கிறது. கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தின் முதோல் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமா குளாலி. 54 வயதான இவர் கடந்த வாரம் திடீரென மாயமான நிலையில் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் பரசுராமாவின் மகன் விட்டலா மீது சந்தேகம் எழுந்தது. இதன்பேரில் விட்டலாவிடம் விசாரணை நடத்திய போது தான் தன் தந்தையை கொடூரமாக கொன்றதன் பின்னணி வெளியே வந்தது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான விட்டலாவை அவரது தந்தை பரசுராமா கண்டித்து வந்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த விட்டலா, தன் தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து சடலத்தை 30 துண்டுகளாக்கி போர்வெல்லுக்குள் போட்டு மூடி வைத்தது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் உடல் பாகங்களை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்