ஐ-போனுக்காக டெலிவரி பாயை கொன்று உடலை எரித்த கொடூர கஸ்டமர்

x
  • ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐபோனுக்கு, கொடுக்க பணம் இல்லாததால், டெலிவரி பாயை கொலை செய்து எரித்து ஐபோனை அபகரித்துள்ள சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறி உள்ளது.

  • #karnataka #iphone #delivery #thanthitv

    கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம் அரசிகெரே பகுதியை சேர்ந்த ஹேமந்த் தத்தா என்பவர், பிளிப்கார்ட் இணையதளத்தில் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஐபோன் ஒன்றை, Cash on delivery மூலம் ஆர்டர் செய்துள்ளார்.
  • ஐபோனை டெலிவரி செய்வதற்காக, கடந்த 7ம் தேதி, நாயக் என்பவர், ஹேமந்த் தத்தாவின் வீட்டிற்கு வந்துள்ளார்.
  • அப்போது கொடுக்க பணம் இல்லாததால், ஹேமந்த் தத்தா நாயக்கை கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளார்.
  • பின்னர் உடலை வீட்டிலேயே மறைத்து வைத்திருந்தபோது, துர்நாற்றம் வீசியுள்ளது.
  • அதன் பிறகு, உடலை சாக்கு மூட்டையில் கட்டி எடுத்துச் சென்ற ஹேமந்த் தத்தா, ஹாசன் ரயில் நிலையத்திற்கு பின்புறம் உள்ள புதரில் வைத்து, பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.
  • வேலைக்கு சென்ற நாயக், வீடு திரும்பவில்லை என அவரது சகோதரர் மஞ்சு நாயக், காவல்நிலையத்தில் புகார் அளிக்கவே, போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
  • செல்போன் சிக்னல் மற்றும் பிப்ரவரி 7ஆம் தேதி, நாயக் டெலிவரி செய்த விவரங்களை வைத்து, ஹேமந்த் தத்தாவை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்