நம்பி பைக்கில் ஏறிய பள்ளி மாணவி.. சீரழித்த பக்கத்து வீட்டுக்காரர் - குமரியில் அதிர்ச்சி

x
  • கன்னியாகுமரி அருகே பள்ளி மாணவியை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி வாகனத்தில் அழைத்து சென்று பக்கத்துவீட்டுக்காரரே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர், அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் நிலையில், பள்ளி முடிந்து பேருந்துக்காக நின்று கொண்டிருந்துள்ளார்.
  • அப்போது, அவ்வழியாக வந்த மாணவியின் பக்கத்து வீட்டுக்காரர் ஜான்சன், மாணவியை வீட்டில் இறக்கிவிடுவதாக கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
  • இதில், ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று ஜான்சன் பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி கண்ணீர் மல்க பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
  • இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகாரளித்தனர்.
  • இதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார், போக்சோ வழக்கின் கீழ் ஜான்சனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்