மாடர்ன் உடை அணிந்ததால் மனைவியை கணவன் வெட்டிக்கொன்ற சம்பவத்தில் திருப்பம் - அம்பலமான அந்தரங்க தகவல்

x

கன்னியாகுமாரி மாவட்டத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு, கணவரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மூலச்சல் பகுதியை சேர்ந்த ஜெபபிறின்ஷ் என்ற பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த எபனேசர் என்பவருக்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் உடை உடுத்துவது தொடர்பாக கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் மனைவி ஜெபபிறின்ஷ்க்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் எபனேசர் , மனைவியை வெட்டி கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மார்த்தாண்டம் அரசு மருத்துவமனையில் அவரை சுற்றி வளைத்த போலீசார், கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்