கன்னியாகுமாரியை அதிர வைத்த பாதிரியார்.. களத்தில் இறங்கிய தனிப்படை போலீசார்

x
  • கன்னியாகுமாரியில் இளம் பெண் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில், ஐந்து பிரிவுகளின் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள பாதிரியாரை தேடி கேரளா மற்றும் பெங்களூருவுக்கு தனிப்படை போலீசார் விரைந்தனர் .
  • கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தேவாலய பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோவின் லேப்டாப் மற்றும் செல்போன் திருடப்பட்டு, பாதிரியரின் பாலியல் சில்மிஷங்கள் குறித்தான வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
  • இதில், தேவாலயத்திற்கு வரும் பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக பாதிரியார் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
  • இந்நிலையில், பேச்சிப்பாறையை சேர்ந்த இளம் பெண் ஒருவரிடம், பெனடிக்ட் ஆன்டோ தவறாக நடந்து கொண்டதாகவும், வாட்ஸ் ஆப்பில் ஆபாச நோக்கில் செய்தி அனுப்புவதாகவும் கூறி இளம் பெண் போலீசில் புகாரளித்தார்.
  • இதனடிப்படையில், தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார் பாதிரியார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், தலைமறைவாக உள்ள பாதிரியாரை தேடி கேரளா மற்றும் பெங்களூருவுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்